Thursday, December 20, 2012

36. திருச்சியில் ஒரு நெகிழ்ச்சி


We, the students who passed out of Regional Engineering College (now known as NIT), Trichy in 1972 had a family get-together (a Mega Meet) at Trichy on 15th and 16th December, 2012 by way of celebrating the 40th year of our graduation. This is a lyrical tribute to the Mega Meet

An English version is given below the Tamil version

சந்திப்பு பற்றிச் சிந்தித்தபோது
சிந்திய எண்ணங்களின் தொகுப்பு இது - இது
சந்தக் கவிதை இல்லை, வேறு
எந்த வகைக் கவிதையும் இல்லை - என்
சொந்த உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு!
*                    *                   *                      *                       *                        *                      *
அரசியல் மாநாடுகள் அடிக்கடி நடப்பதுண்டு திருச்சியில்
அதிசயமாய் ஆங்கோர் மாநாடு உள்ளங்களின் நெகிழ்ச்சியில்
அறுபதுகள் கொண்டாடிய நாற்பதாண்டு விழா
எண்பதின்மர் கூடிய எழுச்சிப் பெருவிழா!

எப்போதோ படித்தாராம் இவ்வூர்க் கல்லூரியில்
எப்போதும் நினைத்தாராம் உடன் படித்தவரை
தப்பாமல் வந்தாராம் தத்தம் துணைவியருடன் - ஆகாயக்
கப்பல், ரயில், கார் என்று எதெதிலோ பயணித்து.

மார்கழியில் உற்சவங்கள் மாநிலமெங்கும்
பார்முழுதும் புகழ் பரந்த பாட்டுக் கச்சேரிகள்
சீர்மிகு அரங்கன் கோயில் பகல் இராப்பத்துகள்
யார் அறிவார் நாம் கொண்டாடிய உற்சாக உற்சவத்தை?

தனி மனிதராய்ச் சந்தித்துப் பிரிந்த நாம்
பணி செய்து, துணை பெற்றுப் பொருள் தேடி ஓய்ந்த பின்
பனிக்காலம் துவங்கும் டிசம்பர் மத்தியில்
அணி வகுத்தோம் இங்கே ஓர் மறு ஒளிபரப்பாய்!

விழாக்குழுவினர் செயல் திறன் போற்றிப் புகழ
எழா என் நாவில் சரியான சொற்றொடர்கள்
துழாவிப் பார்த்துக் குறை சொல்லும் குணத்தோரும் நேர்மை
வழாமல் இயலார் சிறு குற்றமும் கூற.

கனக சிவ வெங்கட பால கோபால ராம  சந்திர சாரங்க பூதரின் பணிபற்றி
மனதாரப் பாராட்டாதோர் மாநாட்டில் இல்லை
குறைவற்ற அவர் பணிகள் அனைத்தும் தந்த
நிறைவான அனுபவம்தான் நாம் பெற்றதிங்கே.

அன்று மதுரையில் தமிழ் வளர்த்தது புலவர் சங்கம்
இன்று திருச்சியில் நட்பை வளர்த்தது ஓட்டல் சங்கம்
தொன்று தொட்டு நாம் அறிந்தது திரிவேணி சங்கமம்
இன்று நாம் கண்டதோ நண்பர்களின் சங்கமம்!

வந்தான், கண்டான், வென்றான் என்பர் சீசர் குறித்து - இங்கே சிலர்
வந்தார், கண்டார், நின்றார் கண்கள் நிலைகுத்தி.
வந்தார், கண்டார், நட்டார், பிரிந்தார் அன்றொரு நாள்
வந்தார், கண்டார், களித்தார், பிரியார் இன்று

மன்னர் வாழ் இல்லம்போல் பரந்த ஓட்டல் அறை
சன்னமாய்ச் செய்து வைத்த வேலைப்பாடுகள்
தின்னவும் குறைவில்லாப் பண்டங்கள் உண்டு
மின்னலாய்ச் செயல்படும் சிவாவின் தொண்டு!

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோவென
அறிந்து சொன்ன கம்பன் மொழி பொய்த்ததிங்கே!
பேச இங்கே பல கதைகள் இருந்தன
நேசம் நிறைந்தோரிடம் மனதாரப் பகிர்ந்து கொள்ள.

பழைய நண்பரைப் பார்த்த களிப்பால்
பேச விழைந்தன நட்பு நெஞ்சங்கள் என்றால்
உடன் வந்த துணைவியரின் நிலை? அவரும்
உடன் கொண்டார் நட்பு புதிய மாதரிடம்!

ஆண்களுக்குத்தான் அறிமுகம் தேவை பழக
பெண்களுக்குப் புதிய முகமே போதுமே பேசிப் பழக!
கட்டிய புடவை முதல் கைப்பிடித்த கணவன் வரை மனதுக்கு
எட்டிய விஷயமெல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டுமே மற்றவரிடம்!

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வேண்டும் ஓர் தொகுப்பாளர்
இந்த நம் நிகழ்ச்சிக்கோ இரு தொகுப்பாளர்
சிம்மக் குரலில் முழங்கும் செர்மானிய கோபாலும்
சன்னக் குரலில் மயக்கும் சாய்தொண்டர் தியாகுவும்!

அன்று கேட்ட பாடலை இன்று போட்டார் கோபாலர்
நின்று கேட்டார் பலர்; ஆடிக் களித்தார் சிலர்
சென்றது மனம் பின்னோக்கிப் பல ஆண்டுகள்
வென்றது உள்ளம் காலத்தின் ஓட்டத்தை!

பெண்டிரை அழைத்துப் பேசச் சொன்னார் தியாகு - உள்ளம்
விண்டு தம் கணவன்மார் செயல்கள் பற்றி
உண்டு நமக்கின்று ஒரு கண்டமென ஒடுங்கிக்
கொண்டு நின்றார் நம்மவர் உள்ளம் நடுங்க!

'என் செயல் அம்பலம் ஏறும்'  என்று இவன் தவித்திருக்க,
'உன் மானம் கப்பல் ஏறும்' என்று நண்பர்கள் காத்திருக்க
பெண்மான்களோ பாடினர் தம்மான்களின் புகழினை
'புண்படுத்தோம் எம் கணவர் மனதை' என்றதோர் உறுதியுடன்!

பெண்டிரின் பெருந்தன்மை அவர்தம் குணத்துக்கு ஏற்றம் - அவர்கள்
கொண்ட பரிசுகளோ அவர்கள் வாழ்வுக்கு ஏற்றம்
வலம்புரிச் சங்கு பெற்ற மகளிர் எல்லாம்
நலம் பெறுவர் வாழ்வில் மேலும் அச்சங்கின் சக்தியினால்.

பிற்பகல் வருமுன்னே வந்தது இடைவேளை
அற்புதமான அறுசுவை உணவு உண்ண
அறுபதைக் கடந்தோரின் ஆரோக்கியத்துக்கு உகப்ப
அறுசுவைப் பண்டங்களின் அணிவகுப்பு மரியாதை!

மாணவர் சந்திப்பு என்றாலும்
மனைவியரும் பங்கு கொண்டது சிறப்பென்றால்
அதனினும் சிறப்பு நம்
முதல்வரின் வரவும் பேச்சும்!

மாலைக் கூட்டத்துக்கு மதியமே வந்தார் முதல்வர்
காரணம் இல்லாமல் இல்லை இதற்கு
தன் மாணவச் செல்வங்களின் மனைச் செல்வங்களைக்
கண்டு பேசி அவர்கள் நெஞ்சைக் கவரத்தான்!

கல்லூரி முதல்வர் என்றால் ஓர் வகையில்
கல்வி கற்கும் மாணவர்க்கு அவர் மன்னர்தானே?
நடப்பது அவரின் ஆட்சி, நிலவுவது அவர் சட்டம் என்று
அடங்கலில் பதியா நடைமுறைதானே இயற்கை?

ஆனால் நம் முதல்வர் கதை வேறு! அன்று முதல் இன்று வரை நம்
அனைவரையும் ஆட்சி செய்தாலும் என்றுமே
நமக்கு மன்னர் இல்லை அவர், இளவரசர்தான்
'பிரின்சி' என்றுதானே அவரை அழைக்கின்றோம்?

இளவரசர் என்பது அவர் இளமைக்குத்தான்  அடைமொழி ஏனெனில்
குன்றியதில்லை என்றும் அவர் இறைமாட்சி- தேர்தலில்
வென்ற முதல்வர் போல் ஐந்தாண்டுகள்
வீற்றிருந்து நம்மைக் கோலோச்சியவரன்றோ அவர்!

நாற்பதாண்டுகளுக்குப் பின்
போர் புரியாமலே வென்றார் மற்றும்
ஓர் சாம்ராஜ்யத்தை - நம்மை
ஆள்பவர்களின் இதய சிம்மாசனத்தை!

பரிசளித்தார் பெண்கள் அனைவர்க்கும்
அரியதோர் வெள்ளிக் காசை ஒரு
புதிய ரோஜா மலருடன் இணைத்து
அதிசயம் ஏது பெண்கள் அனைவரும் அவரை வியந்ததில்?

பரிசளிப்பு ஒருபுறம், அவர் பேச்சில் வெளிப்பட்ட அன்புப்
பரிமாற்றம் மறுபுறம் - இது போதாதென்று
வரிசையாய் அனைவர்க்கும் உணவுப்
பரிமாறல் என்ற உயர் சேவை வேறு!

நம் முதல்வர் பெயர் மணி சுந்தரம்
நாம் அனைவரும் அறிந்த மந்திரம்
கல்லூரியில் அவர் நமக்கு அளித்தது சுதந்திரம்
மனிதர்களை மயக்குவது இவர் தனித் தந்திரம்!

புதுவிதப் பாராட்டுக் கூட்டம் மாலையில்
முதல்வரும் மூன்று பேராசிரியர்களும் மேடையில்
சேவை செய்த ஆடிட்டரும் சம இருக்கையில்
செய் நன்றி மறவா மாணவர் மத்தியில்!

முதல்வரின் புகழ் பாட வந்ததங்கே இரு 'புகழ்'
'புகழேந்தி' என்றொருவர் 'கீர்த்தி' சுரேஷ் மற்றொருவர்
போதாது இருவரென்று பேச வந்தார் மேலும் இருவர்
ராஜரிஷி ராஜேஸ்வர் மற்றும் கோதண்டராமன் என்னும்
வில் வேந்தர் பெயர் கொண்ட சொல் வேந்தர்!

பேராசிரியர்கள் 'போர்' (bore) ஆசிரியர்களாக ஆவதுண்டு வகுப்பறையில்
தேரோட்டம் போல் ஊர்ந்து தாலாட்டுவதும் உண்டு
பாராட்டத்தான் வேண்டும் இங்கு பேசிய பேராசிரியர்களை
சீராக அவர் உரைத்த செய்திகளின் தொகுப்புக்காக.

முதல்வரின் ஏற்புரையில் அவர் முத்திரை பதிந்தது
மிதமான நகைச்சுவையில் நம் முகம் மலர்ந்தது
கனமான அறிவுரை காணாமல் இருந்தது
பதமான அவர் பேச்சில் நம் உள்ளம் கனிந்தது

தலை வாழை விருந்து இறுதியில்
நிறைவான நாளொன்றின் முடிவினில்
குலைவாழை போல் தலை குனிந்து புசித்தோம் நாம்
கலையாத நினைவுகளின் களிப்பினில்

முதல்நாள் சங்கமம் சங்கம் ஓட்டலில்
மறுநாள் பயணம் கல்லூரி நோக்கி
அன்று நாம் அறியாக் கல்லூரிப் பேருந்துகள்
இன்று வந்தன நம்மைச் சுமந்து செல்ல!

பயணப் பாதையில் புதிய பல காட்சிகள்
காலத்தின் போக்கில் கணக்கற்ற மாற்றங்கள்
புதிய சாலைகள் புதிய கட்டடங்கள் புறத்தே புலப்பட நம்
மனதில் மட்டும் பழைய நினைவுகளின் ஓட்டம்

முன்னாள் மாணவரை முன்னின்று வரவேற்ற
இந்நாள் இயக்குநர் இனிய பண்பாளர்
அழகரசர்* என்ற அவர் பெயர்க்கேற்ப
மலர் முகம் காட்டி இனிய சொல் பேசியவர்.

கல்லூரி வளாகத்துக்குள் வட்டமடித்த பேருந்து
வகுப்பறைகள், விடுதிகள் என்று வலம் வந்தது
தங்கிப் படித்த(!) விடுதிகளைத்
தம் தம் துணைவிக்குக் காட்டிய பெருமை நமக்கு

வகுப்பறை எதுவென்று அவர் வினவினாலோ
வகுத்துச் சொல்ல விடையில்லை நம்மிடம்
எப்போதோ ஓரிரு முறை போன உணர்வு
இப்போது எப்படி இருக்கும் நினைவு?

விட்டது படிப்பு என்று விடுதலை பெற்றோடிய போதும்
விட்டு அகலுமோ விடுதி வாழ்வின் நினைவுகள்?
பழைய அறைகளைப் பார்வையிட்டதும்
கண்ணீரும் வந்தது கரை கடந்த களிப்புடன்.
இனியும் வருமோ அந்த நாட்கள்?
இதயம் விடும் ஏக்கப் பெருமூச்சுக்கள்!

மெகா சந்திப்பின் இறுதியில் ஓர் இன்சுவை விருந்து
மெகா மெஸ் என்னும் பெயர் பொருந்திய கூடத்தில்
இன்று உணவை வாய் ருசித்து உண்டபோதே
அன்று உண்ட அனுபவங்களை அசை போடும் அடிமனம்!

நன்றி கூறுவேன் நம் நண்பர் அனைவர்க்கும்
நயம்பட நானும் வாலியின் வரிகளைக் கடன் பெற்று
'நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு.'

அழகரசர்* - சுந்தரராஜன்



A Passionate Event at Trichy
Trichy has hosted many a political meet
But never a passionate meet like this.
The 40th anniversary celebrated by the 60’s
The confluence of 80 men for a festive meet.

We studied in a college of this city in the distant past
But always do we carry the memory of our classmates in our hearts
That’s what made many of us make it for the meet
Travelling far and wide using different modes of transport.

Margazhi* is known for its surfeit of festivals
Like the music concerts with a world-wide appeal
And the Srirangam temple rituals of 10-days and 10-nights
But who would know of our festival of passion?

We met as individuals in the past and parted after some time
We then went in pursuit of jobs, marriage, money and what not.
We met again for a replay of the past
At the onset of winter in December.

Fantastic arrangements by our Trichy friends
Words I can’t find to convey the feelings of my mind
Even a punctilious person can fault not find
Unless he is a person of unsound mind!

Every participant was amazed
Excellent work of the Trichy heroes
Our experiencing this great event was
But the result of the relentless work of the team.

History mentions a Sangam in Madurai
That worked for promoting Tamil literature
Hotel Sangam at Trichy deepened our friendship
Like the traditional Triveni Sangamam,
We had our Sangamam at Trichy.

Came, saw, conquered - That was Caesar’s story
Came, saw and stood transfixed – This was this day’s cover story
Came, saw. befriended and parted – This happened in the past
Came, saw, felt elated and won’t part again – This happened today.

The spacious hotel had a palatial atmosphere
The thoughtful embellishments added the flavor
A lot of snacks to cherish and relax
A liberal bounty from the benevolent Siva.

Words have no role when the parted meet again, asserts Kamban@
Belied were his words when people meeting after a long gap
Started talking as if having nothing else to do
Driven by the urge to share things with friends.

We got engaged in never-ending conversations
Meeting our old friends after a gap all right
But what could our better halves do right?
They built instant friendships so swift!

Men would wait for formal introductions to converse
Women need no such protocols to socialize
After all they have so much to share
From the design of their saris to talking points about their spouses!

Any event needs a compere
Ours had two that were beyond compare
The stentorian Herr IG
And the soft-toned Sairam Thyagu.

IG played songs that were
Popular in our common rooms of yore
Some listened in trance and some danced in ecstasy
As we went down in our memory lanes
Time took a pause from its pace.

And Thyagu for his part
Asked the ladies to speak out
Their minds about their husbands
Thus planting mines to explode.

Shocked as we all were
Fearing the facts to come out stark
With our bitter halves allowed to talk
Awaited the spectre of flying sparks

While the victims awaited the impose
And the friends a good expose
The ladies displayed a noble pose
Sparing for once their own spouse(s)!

The ladies had a reward unintended
For their choosing to be broadminded
A Dhakshinvarti Shank they got 
As a special gift for making it to the meet

It was time for the lunch break
What an assortment of delicacies to take!
Care was taken of the oldies’ age
In choosing the menu to our advantage

Great it was to have
The presence of spouses in our meet.
Greater it was to have our
Princi also to participate.

Princi made it to the meeting hall
Long before the function’s call
Reason he had for his early call
To charm the ladies first of all!

Head of a college is a king in a way
Having everything in his way
Holding the students in sway
Is this not the prevalent way?

But our Princi was no King that way
Though ruling us he has been till this day
He is the Prince for us
The way we call him that is.

Prince he is only because of his youth
Since he is an emperor otherwise
Never was his authority in dispute
During the half decade of our student days.

The emperor conquered yet another territory
After a gap of years counting forty
The crown he won this time
Was the hearts of the queens of our homes!

He presented the ladies with a precious gift
Of a silver coin enshrined with the Goddess of wealth
Embellishing it with a fresh flower of Rose
No wonder he won over their hearts!

Felicitation program in the evening
Princi and three other professors on stage adorning
With our Trust Auditor also joining
The stage presented quite a gathering.

Who were more apt to pay tributes to the Princi
Than the duo that had ‘fame’ in their names, no fancy
Referring I am to Pugazhendhi, the name meaning ‘the holder of fame’
And Keerthi Suresh, his first name meaning ‘of repute’

The ‘famous’ two made their presentation too good, yet
There was a third man to cast his spell too
And it was Kothandaraman, ‘the master of archery’ in name
And a ‘master of oratory’ indeed!

And of course Rajeswar, the professor
As he was referred to by Gopal Iyer
Dwelt on the freedom we got without fighting for
So it was a foursome tribute, not fulsome a bit.
  
Professors tend to bore students in their classes
Putting them to sleep while taking them through tortuous passes
But the trio that spoke this day
Gave us something useful in their say.

The Princi had his stamp in his speech
Sparkling with his ready wit as his wont
Averting pious platitudes for good
And charmed us all with his human touch.

Ended the day with a sumptuous meal
Served in tradition on a plantain leaf
As we partook the meal to our hearts’ content
We found our hearts lined with emotional tint.

First day of the meet at Hotel Sangam
Second day was journey to the college
College buses not seen those days
Came to ply us to our abode of yesterdays.

Several changes en route we observed
New buildings and roads that were built
Unmindful were we of these since
Our minds were living in the distant past.

Welcome to the old students was grand
By the present Director and his band
Sundararajan is his name and a
Wonderful person he was to us.

Around the campus the buses plied
Showing us the buildings old and new.
Proud were we in showing to our halves
The hostels that we stayed in our youth.

If they would ask about the classrooms
May be we couldn’t show them today
Visited them only rarely those days
How can we remember them past many days?

Felt relived sure once our studies got over
But about the hostels there’s a hangover
How can we forget those good old days
Of staying together with strangers turned friends?

When we stepped into our old hostel rooms
Tears flowed from eyes both down
‘Can we get back into the past?’
Craved our hearts in earnest quest.

Ended the Mega Meet with a lunch magnificent
In the Mega Mess, the name coincident
As our tongues relished the food
Our hearts chewed the memory cud.

It’s time to thank all my friends
Limited as I am with words that befit
Borrow I would from Vaali, the Tamil film lyricist
‘I thank my eyes for bringing you (all) close to me.’
  
Margazhi* - The ninth month in the Tamil calendar (Dhanur masya).

Kamban@ - The Tamil poet, the author of  ‘Raama Kaathai,’ popularly known as ‘Kamba Ramayanam.’



Wednesday, December 19, 2012

35. ஒரு நாள், ஒரு நினைவு


This poem carries my reflections on the get-together of the classmates of Regional Engineering College (now called NIT), Trichy  on 30th August, 2006 at GRT Grand Days Hotel, T.Nagar, Chennai.

கூடினார் முப்பதில்* "அற்புத நாட்களின்**" அரங்கில்
நாடினார் முன்பறிந்த முகங்களின் சாயலை
வாடினார் வாராதார் முகத் தோற்றம் காணாமல்
பாடினார் பழகிய நாட்களின் பல்லவிச் சாரலை

அதிர்ந்தன "அற்புத நாட்களின்" அறைச் சுவர்கள்
முதிர்ந்த இளமை முறுக்கின் கிறுக்கு மொழிகளில்
உதிர்ந்தன காலம் எழுப்பிய இடைவெளிச் சுவர்கள்
குதிர்ந்தது காலம் பல கடந்தோர் மறுகூடல்.

ஆண்டுகள் கடந்தன முப்பத்து நான்கு - இடையில் உயிர்க்
கூண்டு துறந்து பறந்த கிளிகள் சில உண்டு - அன்று
ஈண்டு வந்திருந்தோர் தொகை முப்பத்து மூன்று - பணியின்
மீண்டு வர இயலாதார்க்கும் நம் வாழ்த்துக்கள் உண்டு

உலகுக்கு ஒளி வழங்கி உயிர்ப்பிக்கும் இரவி போல் நம்
கலவைக்கு வழி வகுத்து உழைத்திட்ட இரவிக்கும்***
தொலைக்காட்சி விளம்பரம் போல் தொடர்ந்து நினைவூட்டி
வலுவான அடைத்தளம் அமைத்திட்ட ஆடலரசருக்கும்****
மின்னஞ்சல் கடிதங்கள் மேன்மேலும் அனுப்பி வைத்து நம்
பொன்னெஞ்சங்களைக் கவர்ந்த ஹைதர் அனந்துவுக்கும்*****
இன்னும் வேராக மறைந்திருந்து உழைத்திட்ட பலருக்கும்

சொல்ல விழைந்தேன் நன்றி - ஆயின்
வல்ல சொற்கள் சிந்தையில் வாராமையால்
மெல்ல நழுவுகிறேன் சந்தடியின்றி - நான்
சொல்ல வந்ததை நல்லோர் உள்ளம் அறியும் என்று நம்பி!

முப்பதில்* - ஆகஸ்ட் 30
அற்புத நாட்களின்**  - Hotel GRT "Grand Days"
இரவிக்கும்***  - Ravi of Chennai
ஆடலரசருக்கும்****  - Natarajan (Nalli Nattu) of Chennai

ஹைதர் அனந்துவுக்கும்***** - Ananthakrishnan of Hyderabad.

Here is a rough translation for those who can’t read Tamil

Assembled thirty men in the hall of  the “Grand Days”,
Looked  for the semblances of the faces they had once known,
Pined for meeting those who didn’t turn up (and)
Sang the ode of the days they were together.

Reverberated the walls of the “Grand Days”
With the prattling talk of the middle-aged lads
Crumbled the separating walls of time (and)
Blossomed the reunion after a long interval of time!

Thirty four years have passed. And in the meanwhile
Some have passed away – Of the remaining,
Only thirty three made it – but offer do we
Our greetings to those held back by work!

The Sun (Ravi) gives  life and light to the world.
So has Ravi given a shape to this meet!
Like a TV ad that chases you on, Natarajan with his follow up
Laid the foundation for the show!

Ananthu (meaning “endless”) attracted us with his
Endless emails. And were there others working behind
Like the roots of a tree!

Eager as I am to express my gratitude to all
Yet unable to come out with words that befit
Slip out stealthily unseen by any - hoping that
Noble hearts will discern my intended message.

Written on 5th September, 2006

Saturday, December 1, 2012

34. வாழ்க்கை

1990-ஆம் ஆண்டு ஆந்திரா வங்கி சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவியரங்கத்தில் படிக்கப்பட்ட கவிதை


"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் யாங்களே."

கடவுள் வாழ்த்து கம்பனின் உபயம்
கவிதை உலகில் கம்பன் ஓர் இமயம்
இமயக்கவிக்கு இந்த எறும்பின் வணக்கம்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்
என மனம் வருந்திச் சொல்லிச்
சென்றான் மகாகவி பாரதி
மரணப் படுக்கையில் வீழ்ந்திருந்த
தமிழ்க் கவிதைக்கு
மறுவாழ்வளித்து
மேதினியில் மீண்டும் மிடுக்குடன்
உலவ விட்ட
தமிழ்நாட்டின் தவப்புதல்வனுக்கு
என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.

கவிதையென்றால் காது பொத்திக் காத தூரம் ஓடுவோரும்
இவர் கவிதையென்றால் கேட்டு மகிழ்வார்
கல்லா மாந்தரும் கவிதையின்பம்  பெற்றுக்
களித்திடச் செய்தவர் இத் திரையிசைக்கவி.
எளிய கவிதையில் அரிய பொருள் தந்த
இனிய கவிஞர் கண்ணதாசனுக்கும் என் அஞ்சலி.

பெருங்கவிஞர் பெயர் சொல்லிச் சபையில்
குறுங்கவி கொஞ்சம் சொல்ல வந்த அடியேன் நான்
நறும் கல்வியும் ஞானமும் நிரம்பப் பெற்றோரே
வரும் என் கவிதையில் பிழை கண்டால் பொறுப்பீரே!

நினைத்ததுமே கவிதைதனை மனதில் யாத்து
உடன் மொட்டவிழ்க்கும் ஆசுகவியல்ல நான்
பொருள் வேண்டிப் புரவலர், செல்வர் என்று அனைவரின்
அருள் வேண்டிக் கவிபாடும் காசுகவியும் அல்ல
எண்ணங்களாய் என் மனதில் எழுந்தவற்றைச்
சொற்களாக்கி உங்கள்முன் வீசுகவி நான்
புனைந்த கவி சிறக்காமல் பல்லிளித்தால் மாசுகவியென்று
பட்டம் எனக்குச் சூட்டாமல் பொறுத்தருள்வீர்!

வாழ்க்கை எனும் பொருள் பற்றிப் பாடப் பணித்தார்
வாழ்வின் பொருள் பற்றிச் சிந்தித்தேன் நானும்.
பொருளின்றி வாழ்வேது இவ்வுலகில்?
வள்ளுவரும் சொன்னதுதான் இந்தத் தகவல்!
பொருள் இன்றி வாழ்க்கைதனை வாழக் கூடும் - ஆயின்
வாழ்க்கையே பொருள் இன்றிப் போகக் கூடுமோ?

சிந்தித்தால், வாழ்க்கையில் இங்கே பொருளில்லை பலர்க்கு
அன்றாட உணவு கொள்ளப் பொருள் வேண்டி
இரந்து நிற்பார் வீதியில் சிலர்
பொருள் நிறையப் பெற்றிருந்தும் இங்கே
வாழ்க்கையின் பொருளை எண்ணி
உறக்கம் கொள்ளாமல் கிடந்து துடிப்பார்
மலர் மஞ்சில் வேறு சிலர்

வாழ்க்கைதான் என்னவென்று அறிய வேண்டி
மனதில் எழுந்த கேள்விக்கோர் விடையைத் தேடி
அலைந்து திரிந்தது நெஞ்சம்தான் எண்ணக்காட்டில்.
பார்வை உயர்ந்து நிலைத்தது சூனிய வானில்.

வானில்தான் அப்போதோர் அற்புதக் காட்சி
தானே நுழைந்து அமர்ந்ததென் கண்மணிக்குள்
வண்ணங்கள் ஏழுமங்கே ஒளிர்ந்து சிரிக்க
வில்லாகத் தெரிந்தது அக்காட்சி வானில்.

கேள்விக்கு விடை கண்டேன் என்றது மனது
'வாழ்க்கை ஓர் வானவில்' என்று கண்டு சொன்னது
'வானவில்லைப் போல்
வாழ்க்கையும் ஓர் வண்ணக் கலவை' என்று.
விண்டு சொன்னது.

விஞ்ஞானம் அறிந்தோர்க்கு வண்ணங்கள் மாயை
வெண்மையென்னும் வெளியில் ஒடுங்கும் ஒளிச்சிதறல்கள்
மெய்ஞ்ஞானம் அடைந்தோர்க்கு வாழ்வும் ஓர் மாயை
அண்டமெனும் வெளியில் கலக்கும் குடுவைக் காற்று

அஞ்ஞானி எனக்கு ஏற்பில்லை இந்த வானவில் ஒப்பீடு
வாழ்க்கைக் கலையில் வல்லோரை
வானத்தை வில்லாய் வளைப்பர் என்பர்
வந்த சுவட்டிலேயே மறையும்
வானவில்லே வாழ்க்கையென்றால்
வேண்டாம் அவ்வாழ்வெனக்கு!

பின் வாழ்க்கையின் பொருள்தான் என்ன?
மீண்டும் ஓர் விடையைத் தேடித்
துருவினேன் வாழ்வின் கூறுகளை.
புகைவண்டியில் சென்றபோது
கிடைத்ததோர் விளக்கம் எனக்கு
வாழ்க்கை ஓர் பயணம் என்று.

பயணம்போல் வாழ்க்கைக்கும்
பாதைகள் பலவும் உண்டு.
விண்ணில் பறப்போர் சிலர்,
மண்ணில் புரள்வோரும் உளர்!

உயர்வகுப்பும் தாழ்வகுப்பும் உண்டுதான்
வாழ்க்கைப் பயணத்தில்.
இட ஒதுக்கீடும் உண்டு
பயணத் துணைகள் உண்டு
பிணக்குகள் உண்டு
பாதியில் விடைபெறுவோர் உண்டு
சொல்லாமலே பிரிந்து செல்வோரும் உண்டு - பணம்
உள்ளோர்க்கு நல்லுணவும்,
பிற வசதிகளும் உண்டு
இல்லார்க்கோ எப்போது முடியும்
இப்பயணம் என்ற சலிப்புதான் உண்டு!


விதிகள் உண்டு, விலக்குகள் உண்டு
மீறுவோர்க்கு தண்டனை உண்டு
தப்பிக்க வழிகளும் உண்டு!


பாதைகள் மாறுவதுண்டு
திருப்பங்கள் நிறைய உண்டு.


வழிப்பறிகள் உண்டு வழித்தவறுதலும் உண்டு
பயணத் தடைகள் உண்டு
தடம் புரளல் உண்டு
விபத்துகள் உண்டு, விபரீதங்களும் உண்டு
வாழ்க்கை ஓர் பயணம் என்ற
கருத்திலும் பொருத்தம் உண்டு.

ஆனால் பயணத்துக்கோர் துவக்கம் உண்டு,
முடிவுண்டு,
நோக்கம் உண்டு
வாழ்க்கைக்கு இவைதான் உண்டோ?
துவங்குமிடம் தனக்குத் தெரியாது
முடியுமிடம் எவர்க்கும் தெரியாது!
நோக்கம் ஒன்று உண்டா என்பதும் தெரியாது

இறைவனை அடைவதே நோக்கமென்பார் சிலர்
இதை ஏற்காதவர் வேறு சிலர்
ஏற்றவரும் இதுபற்றி நினைப்பதில்லை பல பொழுதில்!
பயண முடிவில் இன்னோர் பயணம் உண்டென்றும் பகர்பவர் பலர்.

நோக்கமில்லா வாழ்க்கையையும்
இலக்கு நோக்கிய
பயணத்தையும் ஒன்றாகக் கருதுவதெப்படி?
ஏற்கவில்லை மனது.

மீண்டும் தேடினேன் வேறொரு பொருளை வாழ்க்கைக்கு
கால்கள் கடந்தன ஓர் இருப்புப் பாதையை
மனமோ சென்றது விரிந்த அப்பாதையின் பின்னே

இணையாகச் செல்லும் பாதை
இரண்டு தண்டவாளங்களாய்.
இறுதிவரை பிரிவதில்லை இணை,
இணைவதும் இல்லை ஏனோ!

தூரத்தில் பார்த்தால் அங்கே
தெரியும் ஓர் இணைப்பு போல்.
நெருங்கினால் விலகும் அவையும்,
தனிமை குலைந்த காதலர் போல்!

மீண்டும் ஓர் தொலைதூரப் புள்ளியில்
தோன்றும்தான் இரண்டும் இணைந்து

வாழ்க்கை கூட இப்படித்தானே?

குறிக்கோள் ஒன்றை நாமும்
குறி வைத்து அடைந்த பின்னே
திருப்திதான் நமக்கும் இல்லை
வேறோர் குறிக்கோள் அங்கே
தொலைவில்தான் மையம் கொள்வதால்!

முயற்சியும் இலக்கும் இங்கே
இணையாகச் செல்லும்
இருப்புப் பாதை போல்.

இலக்குதான் எட்டும் தொலைவில்
இருப்பதாய்த் தோன்றும் நமக்கு
நெருங்கிய பின்பே அறிவோம்
இலக்கு அங்கே விலகிப் போனதென்று.

முயற்சி மீண்டும் தொடரும் பின்னே
பிறிதுமோர் இலக்கை நோக்கி
முயற்சியும் இலக்கும் இதுபோல்
தொடர்ந்து போகும் இணையாய்
முடிவில் இரண்டும்
வேறோர் பாதையில் கலக்கும் வரை
இரு தண்டவாளங்களும் இணைந்து விட்டால்
முடிந்து விடும் பாதை அங்கே!

இலக்கை நாமும் எட்டி விட்டோம் என்றால்
பின் வாழ்க்கையில் ஏது தொடர்ச்சி?

பின், வாழ்க்கை என்பது என்ன?
வாழ்க்கை ஓர் இலக்கு
அதை அடைவதே வாழ்வின் நோக்கம்
என்றும் நாம் கொள்ளலாம்
ஆயினும் இவ்விளக்கமும்
ஏற்றதாய் இல்லை எனக்கு.

இலட்சிய வாழ்க்கை என்பது அலட்சிய மனிதர்க்கேது?
'சூரியன் நாளைக்காலை மறக்காமல் உதிக்கட்டும் முதலில்
பிறகு நாம் நினைத்துப் பார்ப்போம்
நாளை எனும் நாளைப்பற்றி
அதுவரை ஆழ்ந்திருப்போம்
இன்றையத் தேவைகளின் தேடலில்'

என்பதே இங்கு பலரின் இயல்பாய் இருக்கும்போது,
இலக்கு ஏது, முயற்சிதான் ஏது?

வாழ்க்கையென்னும் புதிருக்குத்தான்
பொருத்தமாய் ஓர் விடையைத் தேடி
சலித்துத்தான் போனேன் நானும்
சற்றே கண்ணயர்ந்தேன்
விழித்திருந்தேன் கனவுகளில்
உறங்கிக் கொண்டே
உறக்கம் கலைந்ததும்
நினைத்திருந்தேன் கனவுகளை
தோன்றியது அப்போது ஓர் எண்ணம்
இவ்வண்ணம்!

வாழ்க்கை ஓர் கனவென்று கருதுவதில்
பொருத்த்ம் உண்டோ?
கனவுதான் வாழ்க்கை எனலாம்;
காரணங்கள் பல உண்டு.

வாழ்வில் நடப்பவை பலவும்
நம்பக் கூடியதாய் இல்லை
உயர்ந்த ஓர் எண்ணம்
உள்ளத்தில் உதித்து
அதை வெளியே சொன்னால்
'காணாதே கனவு நீயும்'
என்று கண்டிப்பார்,
கேலி செய்வார்.

எதிர்பார்ப்புகள் பலவும் இங்கே
பகல் கனவாய்ப் பொய்க்கின்றன
வாழ்க்கையுடன் போராடிச்
சலித்து ஓய்ந்த பலரும்
தம் நிலை மறந்து வாழ்வதும்
கனவுலகில்தான்!

சொப்பன வாழ்க்கை என்றே
சொல்லியும் போனார் முன்னோர்
கலையும் ஓர் கனவு போல
வழ்வும் ஓர் மாயை என்றார்
வண்ணக் கனவுகள்
நாமும் வலிந்து கண்டால்
தன்னாலே வாழ்வில் ஏற்றம் வரும்
என்பர் சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்

பாதியில் கலையும் கனவு போல் சில நேரம்
முடியும் வாழ்க்கையும் இடையில் சட்டென்று.
கனவுக்கும் வாழ்வுக்கும் இதுபோல்
பொருத்தங்கள் பல உண்டு

ஆனால் கனவுதான் வாழ்க்கை என்பதும்
பொருந்தாத விளக்கம்தான்.
வாழ்க்கைக்கு முயற்சி வேண்டும்
கனவுக்கு உடல் அயர்ச்சியே போதும் (உறக்கம் வர).
விழிப்புதான் வாழ்க்கை என்றால்,
உறக்கத்தில் உலவும் கனவு..
கனவை வாழ்வின் மறுபக்கம்
என்று கருதுவதே
பொருத்தமாய் இருக்கும்.

பின், வாழ்க்கையின் பொருள்தான் என்ன?
பிறர் பொறுமையைச் சோதிப்பதோ?
உங்களில் சிலர் இப்படிக் கேட்க
நினைப்பது தெரிகிறது.
பொறுத்திருங்கள் இன்னும் கொஞ்சம்
வாழ்க்கையின் பொருளைத்தான் தேடுகிறேன்
கண்டதும் நானும் விடையைச் சொல்லி
விடைபெறுவேன் விரைவில்; அஞ்சேல்!

தேடித் தேடிக் களைத்தேன் நான்
தேடிய பொருள் கிட்டவில்லை
அகராதிகள் ஆயிரம் இருந்தும்
அவை எதிலும் இல்லை வாழ்வுக்குப் பொருள்

நாடிப் போனேன் பலரையும்
அவரிடம் கேட்டறியலாம்
வாழ்வின் பொருளையென்று.
எவரும் விடை சொல்லவில்லை எனக்கு.
நேரமில்லையாம் எவர்க்கும்
அனைவரும்எதையோ
தேடிக் கொண்டிருந்ததால்!

நாடிப் போனவர் அனைவருமே
எதையோ தேடிக் கொண்டிருந்ததால்
நாடிப் போன பொருள் கிடைத்தது எனக்கு.
கண்டறிந்தேன் வாழ்க்கையும்
ஓர் தேடல்தான் என்று

பிறந்த குழந்தை மண்ணில் விழுந்ததும்
அழுதிடும் அன்பைத் தேடி
தேடிய அன்பு அன்னையிடம் கிடைத்ததும்
தேடும் வேறு எதையோ வேண்டி

தேடியது கிடைத்ததும் மீண்டும் தேடல்.
வாழ்வின் நோக்கம் தேடல் ஒன்றே.

மண்ணில் இந்தத் தேடல் இன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ?

எதையோ தேடி அலையும் மனிதரே!
தேடுவீர் எதையும் உம்மிடமே

மதங்கள் சொல்லும் நீதியும் இதுவே
சுலபம் இல்லை எவர்க்கும் இதுவும்
எனவே தேடல் இங்கே நிற்பதே இல்லை.

இறந்த பின்பாவது தேடல் நிற்குமா?
யாருக்குத் தெரியும் இதற்கு விடை?
உடலைப் பிரிந்த உயிரும் உறைவிடம் வேண்டி
தேடிச் செல்லுமாம் பிறிதொரு உயிரை
எனவே தேடல்தான் நித்தியம் இங்கே!

சூரியனைச் சுற்றும் பூமியும்
மற்ற கோள்களும் கூட
எதையோ தேடித் தேடியே அலையும் போலும்!

பல்லாயிரம் கைகளைக் கதிர்களாய் வீசிக்
கதிரவனும் எதையோ தேடி அலைகிறானோ தினமும்?

ஆதலினால் உமக்குச் சொல்வேன் நான்
தேடலே வாழ்க்கை என்று.
என் கவிதையைக் கேட்டு முடித்ததும்
தேடிச் செல்வீர் ஓர் நல்ல கவிதையை.
அறிவேன் நானும்!

தேடலாம் எதையும் அது கிடைக்கும்வரை
தேடலாம் பிறவற்றையும் இதயம் இயங்கும் வரை
தேடினால் கிடைக்கும் எதுவும் உமக்கு
வாழ்க்கையை வகுக்கும் சத்தியம் இதுவே
சான்றோர் சொன்ன தத்துவம் இதுவே